கோவையில் பிளாஸ்டிக் அல்லாத மாற்று பொருட்களுக்கான "மை ஷாப்பிங் மை பேக்-2017" கண்காட்சி

ஆர்.எஸ்.புரத்திலுள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் (25.03.2017) மற்றும் நாளை மறுநாள் (26.03.2017) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவிருக்கும் பிளாஸ்டிக் அல்லாத மாற்று பொருட்களுக்கான (மை ஷாப்பிங் மை பேக்-2017) கண்காட்சியை மாநகராட்சி ஆனையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் இன்று காலை 11.00 மணியளவில் துவக்கி வைத்தார். இதில் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பை கடை விற்பனை உரிமையாளர்கள், பாலித்தீன் பை விற்பனை சங்கத்தின் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், கடை வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கலந்து கொண்டனர். 

 

இது குறித்து மாநகராட்சி ஆனையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் கூறுகையில்; மே-1ம் தேதியிலிருந்து கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஈ50 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் முற்றிலுமாக தடைசெய்யப்படவுள்ளது. மேலும், மாநகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 50 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் திடீர் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். ஆகவே, தடைசெய்யப்பட்ட  50 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படுவதுடன் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 



மேலும், பிளாஸ்டிக் அல்லாத மாற்று பொருட்களுக்கான வழி மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும். குறிப்பாக வியாபாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்த மாதிரியான செயல்களை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய முயற்சி தான் இந்த மை ஷாப்பிங் மை பேக் கண்காட்சி. இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள அனைத்து வகையான பொருட்களும் இயற்கைக்கு உகந்த பொருட்கள் தான் உள்ளது. இதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். முக்கியமாக இத்திட்டம் பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உதவும், அதுமட்டும்மல்லாமல் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இத்திட்டத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றம் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார். 



இக்கண்காட்சியில் கேரளா, அசாம், மும்பை ஆகிய மாநிலத்தில் இருந்தும் பல்வேறு வகையில் பிளாஸ்டிக் அல்லாத மாற்று பொருட்கள் மக்களுக்காக கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் கோவையில் உள்ள விவசாயிகள், முதியோர்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் பல்வேறு வகையில் இயற்கைக்கு உகந்த பொருட்களை தானே தயாரித்தும் கண்காட்சியில் பார்வைக்கும் விற்பனைக்கும் வைத்துள்ளனர். பேப்பர் பேக், துணி பேக், தேங்காய் நாரில் ஆனா தொட்டிகள் மட்டும் வாழையிலை போன்ற பல்வேறு வகையிலான இயற்கை பொருட்களும் இக்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இதனை மாநகராட்சி மற்றும் சுவச் பாரத் அம்பாஸ்டர் ஏற்பாடு செய்தது. 



Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...