கோவையில் பிளாஸ்டிக் அல்லாத மாற்று பொருட்களுக்கான "மை ஷாப்பிங் மை பேக்-2017" கண்காட்சி

ஆர்.எஸ்.புரத்திலுள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் (25.03.2017) மற்றும் நாளை மறுநாள் (26.03.2017) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவிருக்கும் பிளாஸ்டிக் அல்லாத மாற்று பொருட்களுக்கான (மை ஷாப்பிங் மை பேக்-2017) கண்காட்சியை மாநகராட்சி ஆனையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் இன்று காலை 11.00 மணியளவில் துவக்கி வைத்தார். இதில் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பை கடை விற்பனை உரிமையாளர்கள், பாலித்தீன் பை விற்பனை சங்கத்தின் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், கடை வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கலந்து கொண்டனர். 

 

இது குறித்து மாநகராட்சி ஆனையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் கூறுகையில்; மே-1ம் தேதியிலிருந்து கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஈ50 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் முற்றிலுமாக தடைசெய்யப்படவுள்ளது. மேலும், மாநகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 50 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் திடீர் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். ஆகவே, தடைசெய்யப்பட்ட  50 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படுவதுடன் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 



மேலும், பிளாஸ்டிக் அல்லாத மாற்று பொருட்களுக்கான வழி மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும். குறிப்பாக வியாபாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்த மாதிரியான செயல்களை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய முயற்சி தான் இந்த மை ஷாப்பிங் மை பேக் கண்காட்சி. இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள அனைத்து வகையான பொருட்களும் இயற்கைக்கு உகந்த பொருட்கள் தான் உள்ளது. இதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். முக்கியமாக இத்திட்டம் பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உதவும், அதுமட்டும்மல்லாமல் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இத்திட்டத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றம் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார். 



இக்கண்காட்சியில் கேரளா, அசாம், மும்பை ஆகிய மாநிலத்தில் இருந்தும் பல்வேறு வகையில் பிளாஸ்டிக் அல்லாத மாற்று பொருட்கள் மக்களுக்காக கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் கோவையில் உள்ள விவசாயிகள், முதியோர்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் பல்வேறு வகையில் இயற்கைக்கு உகந்த பொருட்களை தானே தயாரித்தும் கண்காட்சியில் பார்வைக்கும் விற்பனைக்கும் வைத்துள்ளனர். பேப்பர் பேக், துணி பேக், தேங்காய் நாரில் ஆனா தொட்டிகள் மட்டும் வாழையிலை போன்ற பல்வேறு வகையிலான இயற்கை பொருட்களும் இக்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இதனை மாநகராட்சி மற்றும் சுவச் பாரத் அம்பாஸ்டர் ஏற்பாடு செய்தது. 



Newsletter

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...